லேபிள்கள்

திங்கள், 13 மே, 2024

வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்.

வாழைப்பழம் சாப்பிடுவதால் பல நன்மைகள் உண்டு என்பதை பலரும் அறிந்திருப்போம்.

பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ள வாழைப்பழம் சாப்பிடுவதால் தீமைகளும் ஏற்படும் என்பது தெரியுமா?

எடை அதிகரிக்கும்

வாழைப்பழத்தில் குறைந்த அளவு கலோரிகள் இருப்பது உண்மை தான் ஆனால் அதனை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் போது, எடை அதிகரிக்கச் செய்யும் எனவே ஏற்கனவே உடல் பருமனாக இருப்பவர்கள் வாழைப்பழம் அதிகமாகவோ அல்லது அடிக்கடியோ சாப்பிடக்கூடாது.

தலைவலி

ஒற்றைத்தலைவலிக்கு உடலில் சுரக்கும் தைரமின் என்னும் சுரப்பி தான் காரணம் . இவை அதிகப்படியான வாழைப்பழம் சாப்பிட்டால் சுரக்கும்.

பற்கள்

வாழைப்பழத்தில் அதிகப்படியான ஸ்டார்ச் இருப்பதால் பற்சொத்தை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. உணவுப்பொருளை மெல்லும் போது ஸ்டார்ச்சுகள் பல் இடுக்குகள் போய் தங்கிவிடுகிறது. சரியாக சுத்தம் செய்யாத போது பல் இடுக்கில் இருக்கும் ஸ்டார்ச்சுகளிலிருந்து பாக்டீரியா பரவி பல் வலி, பற்சொத்தை போன்றவை ஏற்படும்.

வயிற்று வலி

தொடர்ந்து அதிகப்படியான வாழைப்பழம் எடுப்பவர்களுக்கு வயிற்று வலி உண்டாகும். இதில் இருக்கும் ஸ்டார்ச்சுகள் ஜீரணமாக தாமதமாகும். மேலும் மேலும் தொடர்ந்து அதே உணவை எடுத்துக் கொள்வதாலும் மற்ற உணவுகளை எடுத்துக்கொள்வதாலும் ஜீரணப்பதில் சிக்கல் ஏற்ப்பட்ட வயிற்று வலி ஏற்படலாம்.

சிறுநீரகம்

சிறுநீரகத்தின் செயல்பாடுகள் சரியாக இல்லை என்றோலோ அல்லது சிறுநீரகத்தொற்று போன்ற பாதிப்புகள் இருந்தால் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்த்திட வேண்டும். வாழைப்பழத்தில் இருக்கும் அதிகப்படியான பொட்டாசியம் சிறுநீரகத்திற்கு வேலைப்பளுவை அதிகரிக்கும்.

நரம்புகள்

வாழைப்பழத்தில் விட்டமின் பி6 அதிகப்படியாக இருக்கிறது மருத்துவர்களின் அறிவுரையின்றி அளவுக்கு மீறி விட்டமின் பி6 எடுத்துக்கொண்டால் அது நரம்புகளை பாதிக்கும்.


--

வியாழன், 9 மே, 2024

நாற்பது வகை கீரைகளும் அதன் பயன்களும்...!!*

அகத்திக்கீரை ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும்.

முடக்கத்தான் கீரை கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.

மணத்தக்காளி கீரை வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.

முருங்கைக்கீரை நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.

பசலைக்கீரை தசைகளை பலமடையச் செய்யும்.

அரைக்கீரை ஆண்மையை பெருக்கும்.

கொடிபசலைக்கீரை வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.

மஞ்சள் கரிசலை கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.

குப்பைகீரை பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.

புளியங்கீரை சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.

பிண்ணாருக்குகீரை வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.

பரட்டைக்கீரை பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.

பொன்னாங்கன்னி கீரை உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.

சுக்கா கீரை ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.

வெள்ளை கரிசலைக்கீரை ரத்தசோகையை நீக்கும்.

வல்லாரை கீரை மூளைக்கு பலம் தரும்.

காசினிக்கீரை சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.

சிறுபசலைக்கீரை சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.

புண்ணக்கீரை சிரங்கும், சீதளமும் விலக்கும்.

புதினாக்கீரை ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.

நஞ்சுமுண்டான் கீரை விஷம் முறிக்கும்.

தும்பைகீரை அசதி, சோம்பல் நீக்கும்.

முரங்கைகீரை சளி, இருமலை துளைத்தெரியும்.

முள்ளங்கிகீரை நீரடைப்பு நீக்கும்.

பருப்புகீரை பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.

புளிச்சகீரை கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.

மணலிக்கீரை வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.

முளைக்கீரை பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.

சக்கரவர்த்தி கீரை தாது விருத்தியாகும்.

வெந்தயக்கீரை மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.

தூதுவலை ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.

தவசிக்கீரை இருமலை போக்கும்.

சாணக்கீரை காயம் ஆற்றும்.

வெள்ளைக்கீரை தாய்பாலை பெருக்கும்.

விழுதிக்கீரை பசியைத்தூண்டும்.

கொடிகாசினிகீரை பித்தம் தணிக்கும்.

துயிளிக்கீரை வெள்ளை வெட்டை விலக்கும்.

துத்திக்கீரை வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.

காரகொட்டிக்கீரை மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.

மூக்கு தட்டைகீரை சளியை அகற்றும்.

நருதாளிகீரை ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.



--

திங்கள், 6 மே, 2024

பெண்கள் மூக்குத்தி அணிவதற்கு பின்னால் உள்ள சுவாரஸ்யமான தகவல்கள்.

அன்றும் இன்றும் காரணம் தெரியாமல் அணிந்த மூக்குத்தியின் பெருமை பற்றி தெரியுமா?

மூக்குத்தி என்பது மூக்கில் துளையிட்டு அணியும் நகை.

இப்போது, துளையிடாமலே அணியக்கூடிய மூக்குத்திகளும் கிடைக்கின்றன.

மூக்குத்தி அணிவது என்பது ஒரு அடையாளச் சின்னமாகும். இந்தியாவில் திருமணம் முடிந்த பெண்களும், திருமணம் ஆகாத பெண்களும் பரவலாக மூக்குத்தியை அணிந்திருக்கின்றனர். ஆனால் அதன் அர்த்தம் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. தற்போது உலகம் முழுவதும் மூக்குத்தி அணியும் பழக்கம் பிரபலமாகி வருகிறது.

மூக்குத்தி பழக்கம் எப்போது வந்தது?

இந்திய பண்பாட்டில் மூக்குத்தியைப் பற்றி ஏராளமான நம்பிக்கைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று, 16ஆம் நூற்றாண்டில் மத்திய கிழக்குப் பகுதியில் இருந்து வந்து இந்தியாவின் மீது படையெடுத்த முகலாயர்கள் மூலமாக மூக்குத்தி அணியும் பழக்கம். இந்தியாவிற்கு வந்தது. அது நாளடைவில் இந்தியா முழுவதும் பரவியதாக கூறப்படுகிறது.

இன்னொரு வழக்கம் ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதிகம். இதனால் பெண்கள் மத்தியில் நிற்பவர்களுக்கு அசௌகரியமாக இருக்கும் இதனால் பெண்கள் மூக்கு குத்தி கொள்ளும் வழக்கம் உருவானதாகவும் கூறப்படுகிறது.

மூக்குத்தி அணிவது ஏன்?

மூக்குத்தி அணிவது பலவிதமான அடையாளப் பொருட்களைக் கொண்டிருக்கிறது. அதாவது மூக்குத்தி அணிவது என்பது பண்பாட்டை வெளிப்படுத்துவதாகவோ அல்லது பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதாகவோ அல்லது ஒருவருடைய அழகை மேலும் மெருகேற்றிக் காட்டுவதாகவோ அமைகிறது.

பெண்கள் மூக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல் சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும்.

ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.

பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்டு வருவதற்குத்தான் மூக்கு குத்தப்படுகிறது.

இடது மூக்கில் ஏன் மூக்குத்தி அணிய வேண்டும்?

மூக்கினுடைய இடது துவாரத்தில் மூக்குத்தி அணிவது நல்லது என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் மூக்கின் இடது துவாரத்தில் இருந்து செல்லும் நரம்புகளுக்கும், பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அதனால் பெண்கள் இடது புற மூக்கில் மூக்குத்தி அணிந்தால் அவர்களுக்கு பிரசவம் மிக எளிதாக நடக்கும்.

நன்மைகள் :

மூக்குக் குத்துவதால் சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் என்பவற்றிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். மேலும் பெண்களின் மாதவிடாய் வலியைக் குறைக்க உதவுகிறது.



--

வெள்ளி, 3 மே, 2024

தங்க நகைகள் புதிது போல ஜொலிக்க....

தங்க நகைகளை விரும்பாத பெண்கள் அரிது.

நகைகள் பிடிக்காதவர்கள் கூட, மிகச் சிறிய டிசைன்களில் தங்க நகைகளை வாங்கி அணிந்து கொள்வார்கள். தங்க நகைகளில் கல் வைத்தது, துல்லியமாக டிசைன் செய்யப்பட்டது, முத்து, பவளம் வைத்தது என பல வகைகளில் வடிவமைக்கப்படுகிறது.

அந்த வகையில் பல்வேறு டிசைன்களைக் கொண்ட தங்க நகைகள் வாங்கும் போது புதுப் பொலிவுடன் காணப்படும். ஆனால், பயன்படுத்த பயன்படுத்த அதன் பொலிவு குறைகிறது. மின்னும் தன்மை மங்குகிறது.

சரி. . . நாம் பயன்படுத்தும் தங்க நகைகள் புதிது போல ஜொலிக்க என்ன செய்யலாம்? அதுவும் வீட்டிலேயே அதனை ஜொலிக்க வைக்க முடியுமா? என்றால் முடியும்.

வாருங்கள் அதற்கென்ன வழி என்று பார்க்கலாம்.

அதாவது, நாள்தோறும் நாம் அணியும் தங்க நகைகளை அவ்வப்போது பல்துலக்கும் பேஸ்ட் கொண்டு சுத்தப்படுத்துவது மிகச் சிறந்த எளிய வழியாகும்.

பேஸ்ட் தான் பயன்படுத்த வேண்டுமா என்றால்.. இல்லை.. உங்கள் நெக்லஸ், கை வளையல், கம்மல், போன்றவற்றை வீட்டிலிருக்கும் சாதாரண குளியல் சோப்புப் போட்டும் சுத்தப்படுத்தலாம்.

இது, தங்க நகைகளிலிருக்கும் அழுக்கு போன்றவை அகற்ற உதவும். பேஸ்ட் கொண்டு சுத்தம் செய்யும் போது அதற்கு புதுப்பொலிவு கிடைக்கிறது.

சரி சோப்பு போட்டு கழுவும் போது என்ன செய்யலாம்?

ஒரு சிறிய பாத்திரத்தில் அரையளவுக்கு இளஞ்சூடான தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் சோப்பைக் கரைத்து சோப்புக் கரைசலாக மாற்றுங்கள். அதில், சிறிது துணி சோப்பு அல்லது சமையல் பாத்திரங்கள் தேய்க்கப் பயன்படுத்தப்படும் திரவ நிலை சோப்புகளை சேர்த்துவிடுங்கள்.

ஒரு 15 முதல் 20 நிமிடம் இந்த கரைசலில் உங்கள் தங்க நகையை ஊறவிடுங்கள். பிறகு குளிர்ந்த நீரில் நகையைக் கழுவி, சுத்தமான துணியால் மென்மையாகத் துடைத்து எடுங்கள். பிறகு காற்றோட்டமான இடத்தில் உலர்த்துங்கள்.

அழுக்கு படிந்திருக்கும் தங்க நகையை சுத்தப்படுத்த சின்ன பிரஷ்களைப் பயன்படுத்தலாம். ஆனால் அழுத்தி தேய்த்துவிட வேண்டாம். கவனமாகக் கையாள வேண்டும்.

தங்க நகைகளை எப்போதும் அதற்குண்டான பெட்டிகளில் பாதுகாத்து வையுங்கள்.

ஒன்றை மட்டும் நன்கு நினைவில் கொள்ளுங்கள்., தங்க நகையை சுத்தம் செய்யும் போது கொதிக்கும் தண்ணீரையோ அல்லது ப்ரிட்ஜில் வைத்திருந்த மிகக் குளிர்ந்த நீரையோ பயன்படுத்தவே கூடாது.

வெளியில் நகைகளை பாலிஷ் போட பயப்படுவோர், தங்க நகைகளை சுத்தம் செய்வதற்கென்றே இருக்கும் பேஸ்ட் போன்றவற்றை வீட்டிலேயே வாங்கி வைத்தும் பயன்படுத்தலாம்.

அதேவேளையில், விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட நகைகளை அதிக நேரம் ஊறவைத்து, பிரஷ் கொண்டு தேய்ப்பது சரியாக இருக்காது. அது கற்களின் ஜொலிக்கும் திறனைக் குறைக்கலாம்.



--

திங்கள், 29 ஏப்ரல், 2024

உங்கள் வீட்டில் பல்லி அதிகமாக இருக்கிறதா? அதற்கு தீர்வு தரும் பொருட்கள்.

பல்லியைப் பார்த்தாலே சிலருக்கு அருவருப்பாக இருக்கும். பயமாக இருக்கும்.

அது தவறி மேலே விழுந்துவிட்டால் அபசகுனமாகவும் பார்ப்பார்கள். எப்படியிருந்தாலும் அது வீட்டைச் சுற்றிக் கொண்டிருப்பது, வீட்டை எவ்வளவு சுத்தமாக வைத்தாலும் பலன் இல்லை. அதை எப்படி விரட்டுவது?

பூண்டு : பூண்டின் வாசனை பல்லிகளுக்குப் பிடிக்காது. பூண்டை பல்லி சுற்றும் இடங்களில் வையுங்கள். அது அடிக்கடி தங்கும் இடத்தில் குறைந்த அளவு பூண்டு பற்களைக் குவித்து வையுங்கள். இல்லையெனில் பூண்டுப் பற்களை அரைத்து அதன் நீரை தெளியுங்கள். பல்லி பயம் இனியும் இருக்காது.

மிளகு ஸ்பிரே : பல்லிக்கு மிளகின் வாசனை மற்றும் அதன் காரத்தன்மை முற்றிலும் ஒத்துக்கொள்ளாது. மிளகைத் தண்ணீரில் நன்கு ஊற வைத்து மிக்ஸியின் மைய அரைத்து அதன் நீரை மட்டும் வடிகட்டி அதை வீட்டுச் சுவர்களில் ஸ்பிரே செய்தால் பல்லி வீட்டை விட்டு ஓடிவிடும்.

வெங்காயம் : வெங்காயத்தை கதவு , ஜன்னல், நுழைவு வாயில் ஆகிய இடங்களில் மாட்டி வையுங்கள். அது தங்கும் இடத்தில் வெங்காயத் துண்டுகளை நறுக்கி வைத்தால் பல்லித் தொல்லை குறையும்.

இரசக் கற்பூரம் : இது பொதுவாக பலரின் வீடுகளில் பயன்படுத்தக் கூடியதுதான். பீரோக்களில் வாசனைக்காக வைக்கப்படும். இது வாசனைக்கு மட்டுமல்ல பல்லியின் தொந்தரவை போக்கவும் உதவும். பல்லி வரும் இடங்களில் இதை வையுங்கள்.

ஃபிளை பேப்பர் : இது பொதுவாக ஈ தொந்தரவு, வண்டு போன்ற பறக்கும் பூச்சிகளைப் பிடிக்க வீட்டில் கட்டி வைப்பார்கள். இது பல்லியின் அட்டகாசத்தை ஒழித்துக்கட்டவும் உதவும். சுவரில் இதை ஒட்டி வைத்தால் பல்லி அந்தப் பேப்பரில் அப்படியே ஒட்டிக் கொள்ளும். இது சூப்பர் மார்க்கெட், ஹோம் நீட் ஸ்டோர்களிலும் கிடைக்கும்.

குளிர்ச்சியான நீர் : குளிர்ச்சியான நீரை பல்லியைப் பார்க்கும் போதெல்லாம் அதன் மீது ஸ்பிரெ செய்தால் அது தெறித்து ஓடும்.

மயில் இறகு : மயில் பல்லியை உண்ணக் கூடியது. எனவே மயில் தோகையை பல்லி வரும் இடங்களில் வைத்தால் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.

முட்டை ஓடு : பல்லி வரும் இடங்கள், தங்கும் இடங்களில் முட்டை ஓட்டை வைத்தால் பல்லி வரவே வராது. பல்லியும் முட்டையிடும் வகையைச் சேர்ந்ததால் , பெரிய முட்டை ஓட்டைப் பார்த்ததும் நம்மை விடப் பெரிய உயிரினம் இருக்கிறது என ஏமாந்து ஓடிவிடும்.



--

வெள்ளி, 26 ஏப்ரல், 2024

Hiccups: விக்கல் என்னும் சிக்கலைத் தீர்க்க டிப்ஸ்

Hiccups: விக்கல் வருவதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. பொதுவாக யாராவது உங்களை நினைத்தால் விக்கல் வரும் என வேடிக்கையாக கூறுவார்கள்.

ஆனால் இது சரியான வாதம் அல்ல. இதற்குப் பின்னால் ஒரு அறிவியல் காரணமும் இருக்கிறது. எனவே விக்கல் ஏன் வருகிறது, அதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதை அறிய முயற்சிப்போம்.

விக்கல்கள் தசைகளின் தன்னிச்சையான செயலால் ஏற்படுவதாகும். உதரவிதான தசைகள் திடீரென சுருங்கும்போது,   அதை உங்களால் கட்டுப்படுத்த முடியாமல் போகும் போது இது நிகழ்கிறது. இருப்பினும், இந்த விக்கல்கள் பொதுவாக சில நிமிடங்கள் தான் நீடிக்கும். ஆனால், விக்கல் 48 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் போது, அது கவலைக்குரியதாகிறது

விக்கலுக்கான காரணங்கள்

பல சந்தர்ப்பங்களில், அதிக சூடாக அல்லது வேகமாக சாப்பிடும் போதோ அல்லது காரமான உணவை உண்ணும் போது விக்கல் ஏற்படுகிறது. இது தவிர, பலருக்கு அதிக உற்சாகம் அல்லது மன அழுத்தத்தில் இருந்தாலும் கூட விக்கல் வர ஆரம்பிக்கிறது. கல்லீரல் கோளாறு, நுரையீரல் நோய்த்தொற்று, மூளைக் காய்ச்சல், கணைய அழற்சி, குடல் அடைப்பு போன்றவற்றாலும் விக்கல் வரும்.

உங்களுக்கு நீண்ட காலமாக விக்கல் பிரச்சனை இருந்தாலோ, அடிக்கடி விக்கல் ஏற்பட்டாலோ, நீங்கள் ஒரு மருத்துவரை கலந்தாலோசிப்பது சிறந்தது.

விக்கல்களை நிறுத்த இந்த வழிகளை முயற்சிக்கலாம்

1. விக்கல்களை நிறுத்த, நீங்கள் சிறிது நேரம் மூச்சைப் பிடித்துக் கொள்வது பலன் தரும். சில நொடிகள் உங்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டிருப்பது, உதரவிதானத்தில் உள்ள பிடிப்பை அகற்ற உதவுகிறது, இதன் மூலம் விக்கல் நிற்கிறது.

2. இது தவிர விக்கல் வரும் போதெல்லாம் குளிர்ந்த நீரை அருந்தலாம். ஏனெனில் நீங்கள் தண்ணீரை விழுங்கும் போது,   உதரவிதானம் சுருங்குவது, பிடிப்பை அகற்றுவது ஆகியவற்றில் உதவிடும்.

3. தொடர்ந்து விக்கல் பிரச்சனைகள் ஏற்பாட்டால், நாக்கை வெளியே நீட்டுவதன் மூலம் அதை நிறுத்தலாம். இது விசித்திரமாகத் தோன்றலாம். என்றாலும் இந்த வழி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உண்மையில், உங்கள் நாக்கு ஒரு அழுத்தப் புள்ளி. உங்கள் நாக்கை நீட்டுவது உங்கள் தொண்டையின் தசைகளைத் தூண்டுகிறது.

4. இது தவிர, விக்கல்களை நிறுத்த சரியான இடத்தில் வசதியாக உட்கார வேண்டும். இதற்குப் பிறகு, முழங்கால்களை உங்கள் மார்புக்குக் கொண்டு வந்து இரண்டு நிமிடங்கள் அந்த நிலையில் வைக்கவும். உங்கள் முழங்கால்களை நீட்டுவது மார்பை அழுத்துகிறது, இது உதர விதானத்தின் பிடிப்பை போக்கலாம்.



--

செவ்வாய், 23 ஏப்ரல், 2024

கேஸ் சிலிண்டரை சேமிக்க சிறந்த வழி முறைகள்.

'மாதம் பிறந்தா இதுக்கு அழுதே ஆகணும்னு...' ஒரு பட்டியல் இருக்கும். அதில் ஒன்ற காஸ் சிலிண்டர். நிலையில்லாத விலையில், அலைபோடும் காஸ் சிலிண்டர்கள் பயன்பாடு பொது மக்களுக்கு அத்யாவசியமானது.

அடுப்பு எரிந்தால் தான், உயிர் வாழ முடியும் என்பதால், எந்த காரணம் கொண்டும் அதில் சமரசம் செய்து கொள்ள முடியாது. ஆனால், வந்திறங்கும் சிலிண்டர்கள், குறைந்தது 40 நாட்களாகவது வர வேண்டும் என்பது தான் இல்லத்தரசிகளின் ஆசையாக இருக்கும். ஆனால், 30 நாட்களுக்குள் சில நேரம் முடியும் போதும் தான், எரிச்சல் மேலோங்கும். அதற்கு காரணம் இருக்கிறது. அதை சரி செய்தால், நீங்கள் பயன்படுத்தும் முறையில் கீழ் காணும் தவறுகள் இருந்து, அதை திருத்திக் கொண்டால், கட்டாயம் நீங்கள் நினைத்தது போல காஸ் சிலிண்டர் பயன்பாடு நீண்ட நாட்கள் வரும்.

இதோ உங்களுக்கான டிப்ஸ்:

பாத்திரத்தை அடுப்பில் வைக்கும் போது, அது ஈரமாக இல்லாதவாறு துடைத்து அல்லது காய வைத்ததை உபயோகிக்க வேண்டும். இதனால் பாத்திரம் எளிதில் சூடாகும், எரிபொருள் சிக்கனமும் இருக்கும்.

சமைக்கும் முன்பு, நாம் பலர் செய்யத் தவறும் ஒரு விசயம்... அதற்குரிய பொருட்களை பாத்திரத்தில் வைத்த பின் ரெடி செய்வது அல்லது தேடுவது. இது இரண்டும் காஸ் பயன்பாட்டை அதிகரிக்கும். சமையலுக்கு தேவையான பொருட்களை தயார் செய்த பிறகு தான், அடுப்பை பற்ற வைக்க வேண்டும். இதனால் வீண் தேடுதல் படலம் தவிர்கக்ப்பட்டு காஸ் மிச்சம் செய்யப்படும்.

இதுவும் அதே மாதிரி தான். வீட்டில் அனைவரும் ப்ரிட்ஜ் பயன்படுத்துகிறோம். நேரடியாக ப்ரிட்ஜில் இருந்து பொருட்களை சமையலுக்கு பயன்படுத்தினால், அதன் குளிர் தன்மையை போக்க சூடாகும் நேரம் அதிகரிக்கும். இதனால் எரிபொருள் அதிகம் செலவாகும். அதுவே ப்ரிட்ஜில் இருந்து எடுத்த பொருளை சிறிது நேரம் வெளியில் வைத்து, அதன் குளுமை போனதும், சமைப்பது சிலிண்டரை மிச்சப்படுத்தும்.

நாம் சமைக்க பயன்படுத்தும் பாத்திரம் சூடாகிவிட்டால், உடனே ஸ்டவ்வை 'சிம்'மில் வைக்க வேண்டும். பாத்திரம் சூடாக மட்டுமே வேகம் தேவை. அதன் பின் குறைந்த அளவில் சமைப்பது தான் காஸ் சிலிண்டருக்கும் நல்லது. சமைக்கும் உணவுக்கும் நல்லது. மித வெப்பத்தில் சமைக்கப்படும் உணவுக்கு ஊட்டசத்து அதிகம் என்கிறார்கள்.

சமைக்கும் போது, நாம் செய்யும் முக்கிய தவறில் ஒன்று, பாத்திரத்தை திறந்து வைத்து சமைப்பது. இதனால் கொதிப்பான் வெளியேறி சமையல் நேரம் அதிகமாகும். அப்போது காஸ் சிலிண்டர் இன்னும் அதிகம் செலவாகும். பாத்திரத்தை மூடி சமைக்க வேண்டும்.

குக்கர் ஒரு விரைவு சமையல் முறை என்பதால், குக்கரில் சமைப்பது பெரிய அளவில் காஸ் சிலிண்டர் செலவை மிச்சப்படுத்தும். முடிந்த வரை குக்கம் பயன்பாடு சிலிண்டருக்கு ஆயுள் தரும்.

தண்ணீர் அதிகம் பயன்படுத்துவது, தேவைக்கு அதிகம் சேர்ப்பதை தவிர்க்கவும். தண்ணீர் அதிகரிக்க அதிகரிக்க அதற்கான சமையல் நேரமும் அதிகரிக்கும். இதனால் காஸ் சிலிண்டர் பயன்பாடு அதிகரிக்கும்.

சுடுதண்ணீர் அதிகம் பயன்படுத்துபவர் என்றால், அடிக்கடி அதற்காக காஸ் பயன்படுத்தாமல் ஒரு முறை சுட வைத்து விட்டு பின்னர் அதை தெர்மாஸ் பாட்டில் போன்றவற்றை கொண்டு நீண்ட பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளலாம்.

மிக முக்கியமான ஒன்று... அடிக்கடி நமது காஸ் சிலிண்டர் மற்றும் அடுப்பை சோதனை செய்து கொள்ள வேண்டும். ரெகுலேட்டர், பர்னர், பைப்புகள் சரியாக இருக்கிறதா, லீக் ஆகிறதா என்பதை சோதனை செய்து அறிந்து கொள்ள வேண்டும். அத்துடன், சமைத்ததும், சிலிண்டரை ஆப் செய்து விடுவது கசிவிலிருந்து பாதுகாக்கும்.

இவையெல்லாம் கேட்க சிறிதாக இருக்கலாம்; ஆனால் நடைமுறைப்படுத்தினால் பெரிய அளவில் பயனளிக்கும். எனவே இந்த முறையை முயன்று பாருங்கள்... உங்கள் காஸ் சிலிண்டர் நீங்கள் நினைத்த நாட்களுக்கு பயன்படலாம்.



--

வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்.

வாழைப்பழம் சாப்பிடுவதால் பல நன்மைகள் உண்டு என்பதை பலரும் அறிந்திருப்போம். பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ள வாழைப்பழம் சா...

Popular Posts